தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார், அக்கட்சியின் தலைவர் விஜய் குறித்துப் பகிரங்கமான சில புகார்களைத் தெரிவித்துள்ளார். விஜய் பொதுக்கூட்ட மேடைகளுக்குச் செல்லும் முன்பும், கட்சிப் பணிகளின் போதும் ‘கூல் லிப்’ (Cool Lip) போன்ற புகையிலை சார்ந்த போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ரஞ்சனா நாச்சியாரின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மேலும் அவர் கூறுகையில், “விஜய் இத்தகைய போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளார்; அவை இல்லாமல் அவரால மேடைக்கே செல்ல முடியாத நிலை உள்ளது. அதுமட்டுமின்றி, மது அருந்தாமல் அவரால் விமானத்தில் கூடப் பயணம் செய்ய முடியாது” என்று மிகக் கடுமையான தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஒரு தலைவராக இருப்பவர் இத்தகைய பழக்கங்களைக் கொண்டுள்ள நிலையில், அவர் மக்களுக்குப் போதை ஒழிப்பு பற்றிப் பேசுவது முற்றிலும் போலித்தனமானது என்றும் அவர் சாடியுள்ளார்.
ரஞ்சனா நாச்சியாரின் இந்தப் புகார்களுக்கு விஜய் தரப்பிலிருந்தோ அல்லது தவெக கட்சியிலிருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், திட்டமிட்டு விஜய்யின் புகழுக்குக் களங்கம் விளைவிக்க முயற்சி நடப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…