#image_title
தமிழ் சினிமாவில் நடிகர், கதாசிரியர், இயக்குனர் மற்றும் வசனகர்த்தா என பன்முகத்திறமை கொண்டு விளங்குபவர் ரமேஷ் கண்ணா. இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் இணை இயக்குனராக ரஜினிகாந்தோடு பல படங்கள் வேலை செய்துள்ள அவர் தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்துள்ளார்.
இதில் அவர் அதிகமாக நடித்தது நடிகர் அஜித்தோடுதான். இதனால் அவர் அஜித்துக்கு நெருங்கிய நண்பர் என்ற பிம்பம் உள்ளது. வீரம் படத்தின் டைட்டில் கார்டில் கூட அஜித்தின் ஆல்டைம் நண்பர் ரமேஷ் கண்ணா என்றுதான் டைட்டில் போட்டார்கள்.
இந்நிலையில் ரமேஷ் தற்போது சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் கே எஸ் ரவிக்குமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய போது அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சேரனுடனான நட்பு குறித்து பேசியுள்ளார்.
அதில் “நான் கே எஸ் ரவிக்குமாரிடம் பணியாற்றும் போது சேரன் வருவான். தீவிரமாக யோசிப்பான். ஆனால் எந்த சீனும் சொல்ல மாட்டான். ஆனால் அவன் எடுத்த படமெல்லாம் சிறந்த படங்கள். அதைப் பார்த்த போது என்னடா இவன் இப்படி படம் எடுத்திருக்கான் என தோன்றியது. அப்போது நினைத்துக் கொள்வேன் ‘இவன் சீன் எதுவும் சொல்லாமல் எல்லா நல்ல சீனையும் தன் படத்துக்கு வச்சிகிட்டான்’ என்று.
அவன் பாரதி கண்ணம்மா எடுத்த போது முக்கியமான காட்சியின் ஷூட்டிங்கின் போது அவனுக்கு மஞ்சள் காமாலை வந்துவிட்டது. அப்போது அந்த காட்சியை எலலாம் நான்தான் படமாக்கினேன். அந்தளவுக்கு எனக்கு அவனோடு நெருக்கமான நட்பு இருந்தது.
அவன் காசுக்கு கஷ்டப்பட்ட போது நான் நிறைய தடவை உதவி இருக்கிறேன். அதை அவனிடம் உதவி இயக்குனராக இருந்த சிம்புதேவன் என்னிடம் சொல்லி நினைவுபடுத்தினார். இப்படி நாம் செய்யும் நல்லவை சில நேரம் அதற்கான பயனைக் கொடுக்கும்” எனக் கூறியுள்ளார்.
சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…