Categories: சினிமா

அந்த படம் ரிலீஸ் ஆனா நான் மேலே வந்துடுவேன்னு ராஜ்கிரண் திட்டமிட்டு நிறுத்திவிட்டார்… ராமராஜன் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு குறுகிய கால சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக ராமராஜன் கோலோச்சியது நான்கே நான்கு வருடங்கள்தான். ஆனால் இன்றளவும் அவருக்கான ரசிகர்கள் உள்ளனர்.  அந்த நான்கு ஆண்டுகளில் அவருக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். எம் ஜி ஆர் போல ஒழுக்கமான இளைஞனாக மக்கள் தோழனாக தன்னைக் காட்டிக்கொண்டார் ராமராஜன்.

1987 முதல் 1990 வரை பிஸியான நடிகராக இருந்தார். அப்போது அவரின் தங்கமான ராசா திரைப்படம் ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் வசூலையே தாண்டியதாம். 1985 ஆம் ஆண்டு வெளியான மண்ணுக்கேத்த பொன்னு என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் மருதாணி, ஹலோ யார் பேசுகிறதே, மறக்க மாட்டேன், சோலை புஷ்பங்கள் ஆகிய திரைப்படங்களை அவர் ஹீரோ ஆவதற்கு முன்பு இயக்கினார். இந்த படங்கள் எல்லாம் கையைக் கடிக்காத அளவுக்கு ஓடி, அவரை ஒரு இயக்குனராக நிலைநிறுத்தின.

அப்போதுதான் அவருக்கு ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் கதாநாயகன் ஆகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த படம் ஹிட்டாக அடுத்தடுத்து சில வெற்றிப் படங்களைக் கொடுத்தார். கரகாட்டக்காரன் திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய படங்களின் தயாரிப்பாளராக இருந்த ராஜ்கிரணுக்கும் தனக்கும் இடையிலான கருத்து வேறுபாடு குறித்து பேசியுள்ளார்.

அதில் “ராஜ்கிரண் கொஞ்சம் கடனில் இருந்த போது அவருடைய நண்பர் என்னிடம் அழைத்து வந்து ஒரு படம் பண்ணித்தர சொன்னார். நானும் சரி என்றேன். அப்படி உருவானதுதான், ராசாவே உன்ன நம்பி படம். அந்த படம் வெளியாகி ஹிட்டானது. அடுத்து ‘ராஜ்கிரண் என்னிடம் ‘என்ன பெத்த ராசா’ என்ற டைட்டிலை சொல்லி நீங்கதான் நடிக்கவேண்டும் என்றார். நான் டைட்டிலுக்காகவே ஒத்துக் கொண்டேன். அந்த படமும் ஹிட்.

இதைத் தொடர்ந்து அவர் என்னை வைத்து ‘பெத்தவ மனசு’ என்ற படத்தைத் தொடங்கினார். அந்த படத்தில் அவர் பெயரே இயக்குனராக வரவேண்டும் என ஆசைப்பட்டார். நானும் சரி என்றேன். ஆனால் சில காரணங்களால் படம் பாதியிலேயே நின்றது. இதற்கிடையில் எனக்கும் சில தோல்விப் படங்கள் அமைந்தது. சில படங்கள் கைவிட்டுப் போனது. அதன் பிறகு பெத்தவ மனசு படத்தை கஸ்தூரி ராஜாவை இயக்குனர் ஆக்கி மீண்டுமெடுத்தார். படத்துக்கு இளையராஜா அண்ணனை இசையமைக்கக் கேட்டபோது மொத்த படத்தையும் எடுத்துட்டு வா என்றார். படத்தை எடுத்து முடித்தும் அதை ராஜ்கிரண் ரிலீஸ் செய்யவில்லை. அதற்குக் காரணம் அந்த படம் வந்தால் நான் சினிமாவில் மீண்டும் பெரியாள் ஆகிவிடுவேனோ என்ற அச்சம் அவருக்கு இருந்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

5 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

5 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

7 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

8 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

8 மணத்தியாலங்கள் ago