“3000 கி.மீ பயணம், தேனிலவில் நேர்ந்த பயங்கரம்”… கணவன் கொலையை ‘லைவ்’ ஆக ரசித்த மனைவி.. ஒரு ‘வெயிட்டருக்காக’ தாலி கட்டிய கணவனை தீர்த்துக்கட்டிய கொடூரம்….!

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் அரங்கேறியுள்ள இந்த “ஹனிமூன் கொலை” சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிஷ் (27) மற்றும் அஞ்சலி (23) ஆகியோருக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் மிக விமரிசையாகத் திருமணம் நடந்தது. ஆசிஷ் முதுகலை மற்றும் பி.எட் முடித்த பட்டதாரி ஆவார். நெருங்கிய உறவினர்களுக்கு இடையே நடந்த இந்தத் திருமணம், ஒரு அழகான வாழ்க்கையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஞ்சலியின் வஞ்சகத்தால் அது கொடூரமான கொலையில் முடிந்துள்ளது.

சம்பவம் நடந்த அன்று, அஞ்சலி திட்டமிட்டே தனது கணவர் ஆசிஷை ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத வெறிச்சோடிய பாதைக்கு நடைப்பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே புதர்களுக்குப் பின்னால் மறைந்திருந்த அஞ்சலியின் முன்னாள் காதலன் சஞ்சு மற்றும் அவனது நண்பர்கள், ஆசிஷை வழிமறித்துக் கொடூரமாகத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர் இது ஒரு விபத்து மற்றும் கொள்ளைச் சம்பவம் போலத் தெரிய வேண்டும் என்பதற்காக, அஞ்சலி தனது நகைகளைக் காதலனிடம் கொடுத்துவிட்டு, அந்த இடத்திலேயே மயங்கிக் கிடப்பது போல நாடகமாடினார்.

தொடக்கத்தில் இது சாலை விபத்து என்று கருதப்பட்டாலும், ஆசிஷின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் அஞ்சலியின் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்கள் காவல்துறையினருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தின. தீவிர விசாரணையில், திருமண விழா ஒன்றில் வெயிட்டராகப் பணியாற்றிய சஞ்சு என்பவருடன் அஞ்சலிக்கு இருந்த கள்ளக்காதல் அம்பலமானது. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்த இந்தத் கள்ளத்தொடர்புக்குத் தடையாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்ட அஞ்சலி இக்கொடூரத் திட்டத்தைத் தீட்டியது தெரியவந்தது.

இந்தத் துரோகம் ஆசிஷின் குடும்பத்தை மட்டுமல்லாது, அஞ்சலியின் சொந்தக் குடும்பத்தையும் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. “தவறு செய்த அஞ்சலிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று அவளது சொந்தக் குடும்பத்தினரே ஆக்ரோஷமாகக் கூறியுள்ளனர். தற்போது அஞ்சலி, அவரது காதலன் சஞ்சு மற்றும் அவரது நண்பர்கள் உட்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஒரு சாதாரண ‘வெயிட்டருக்காக’ நன்கு படித்த, அன்பான கணவனைக் கொலை செய்த இந்தப் பெண்ணின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அடேங்கப்பா!.. பிரம்மாண்ட ஏற்பாடு.. சுட்டெரிக்கும் வெயிலுக்கு செம்ம அடி.. டிராக்டரிலேயே ‘ஸ்விம்மிங் பூல்’ அமைத்து வலம் வரும் மாஸ் வாலிபர்.. வைரல் வீடியோ..!!

நாடு முழுவதும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க…

4 minutes ago

“ஒரே ஒரு மேயர் சீட் ஜெயிச்சு காட்டுங்க உதயநிதி..!” – தவெக ஆதவ் அர்ஜுனா விடுத்த நேரடி சவால்..!  எம்.எல்.ஏ பல்லவிக்கு நடந்த அவமதிப்பால் ஆவேசம்…!!

விளையாட்டுத் துறை அமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, சென்னை ஆர். கே. நகரில் நடைபெற்ற…

12 minutes ago

அடேங்கப்பா!.. நம்ம ஊர் ஆளுங்க மூளையே தனி தான்.. வெறும் ஒரு ஓட்டை தட்டை வைத்து இளைஞர் செய்த மேஜிக்.. நெட்டிசன்களை வியக்க வைத்த வைரல் வீடியோ..!

சமூக ஊடக உலகில் ஒவ்வொரு நாளும் மக்களை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு விதமான தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்று வழி…

15 minutes ago

“உலகையே உலுக்கிய இங்கிலாந்து நாடாளுமன்ற விவாதம்!.. 700 பேர் சேர்ந்து இளம்பெண்ணுக்கு செய்த கொடூரம்.. எம்பி வெளியிட்ட மரண பயங்கர தகவல்”..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ரூபர்ட் லோவ் (Rupert Lowe) பேசிய உரையின் போது, அங்குள்ள தனிப்பட்ட கும்பல்களால் வெள்ளையினச்…

22 minutes ago

ஹோட்டலில் 21 பேர் கருகி சாம்பலான கொடூரம்… இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 65 உயிர்கள் பலி.. டெல்லியில் என்ன நடக்கிறது…?

டெல்லி மாநகரில் கடந்த சில ஆண்டுகளில் தீ விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில்…

23 minutes ago

“அஸ்தி கரைக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்.. லாரியுடன் நேருக்கு நேர் மோதிய ஜீப்.. சம்பவ இடத்திலேயே 9 பேர் மரணம்.. பஞ்சாபில் நேர்ந்த பெரும் சோகம்”..!!

இறந்தவர்களின் அஸ்தியை புனித நதிகள், ஆறுகள் அல்லது கடல்களில் கரைத்து, அவர்களின் ஆன்மா நற்கதி அடைய வேண்டும் என்று பிரார்த்திப்பது…

31 minutes ago