தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். மறுபக்கம் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார்.
இவர்களுக்கு நடுவே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி விஜய் அரசியலில் களம் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நீண்ட காலமாகவே விஜயுடன் ராகுல் காந்திக்கு பழக்கம் உள்ளதாக கேஎஸ் அழகிரி கூறியுள்ளார். கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து விஜயுடன் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக ராகுல் காந்தி பேசினார். இதனால் விஜயுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த கே.எஸ் அழகிரி, பேசியதற்காக எல்லாம் கூட்டணி அமைக்கும் என கூற முடியாது என்றார். திமுக உடனான கூட்டணி உடையாது என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் புதிய அமைச்சர்களின் பட்டியலைத் தயார் செய்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுக அணியைச் சேர்ப்பதில் தாமதம் அல்லது தயக்கம் நிலவுவதாகக்…
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…