பிரதீப் ரெட் கார்ட் பற்றி கேட்கப்பட்ட கேள்வி.. பூர்ணிமாவின் பதிலால் மேலும் கோபமடைந்த பிரதீப் ஆண்டனி Fans..

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கிய நாள் முதலே சண்டைக்கு பஞ்சம் இல்லாத இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் நெட்டிசன்களால் அதிகம் ரோல் செய்யப்படும் வந்தது. இந்நிகழ்ச்சியில்  கூல் சுரேஷ், பாவா செல்லதுரை,, விசித்ரா, விஷ்ணு ,வினுஷா தேவி, சரவணன் விக்ரம், ஜோவிகா உட்பட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

poornima1

நன்றாக சென்று கொண்டிருந்த  இந்நிகழ்ச்சியில் ஒரு புயல் அடித்தது. அதுதான் பிரதீப் ரெட் கார்டு விவகாரம். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறி வெடித்தது. இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் களம் இறக்கப்பட்டனர். இதில் அர்ச்சனா, தினேஷ் இருவரும் ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது வரை நல்ல வரவேற்பு பெற்று வருகின்றனர்.

   

இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடையவுள்ள இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை அறிய தற்பொழுது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இறுதி போட்டியில் மொத்தம் 5 போட்டியாளர்கள் மட்டும் தான் நுழைய முடியும்.  இதனால் கடந்த வாரம் ரவீனா மற்றும் நிக்சன் இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இவர்களைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு  பூர்ணிமா 16 லட்சம் தொகையுடன் கூடிய  பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

poornima

பிக் பாஸ் வீட்டிலிருந்து எவிக்ட் ஆன பிறகு, பிரதீப் ரெட் கார்டு சர்ச்சைக்கு ஒவ்வொரு போட்டியாளரும் பதில் கூறி வருகிறார்கள். அந்தவகையில்  ரூ. 16 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பூர்ணிமா இடமும் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு பூர்ணிமா கூறியது ‘நான் யாருக்கும் பதில் சொல்லவேண்டியது இல்லை. ஒரு நாள் இது எல்லாருக்கும் புரியும். அப்போ எல்லாமே எல்லாருக்கும் தெரியும்’ என பேசினார். இதனால் தற்பொழுது பிரதீப்பின் ஆதரவாளர்கள் தற்பொழுது கடுமையான கோபத்தில் உள்ளனர். இதோ அந்த வீடியோ..