என்மேல case போட்டதுக்கு  சிம்பு படம் தான்… தன்னுடைய கைது குறித்து நேரலையில் ரவீந்தர் பளீச் (வீடியோ)…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். இவர்  சின்னத்திரை சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி இருவருக்கும் இது இரண்டாவது திருமணமே.  திருமணத்திற்கு பிறகு இருவரும் ஏகப்பட்ட சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்து  வந்தனர்.இந்நிலையில் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

   

திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.இந்த கைது செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முதல் தடவை தள்ளுபடி செய்யப்பட்ட இவரது ஜாமீன் மனு இரண்டாவது முறை ஏற்றுக்கொள்ளப்பட்டு நிபந்தனை ஜாமீனுடன் தற்பொழுது வெளியில் வந்துள்ளார். ஜாமீனில் வெளிவந்த இவர் தற்பொழுது முதன்முறையாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், கைது நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ‘ சிம்பு பட தயாரிப்பாளரான ஈஸ்வரன் தான் தன்மீது பொய் புகாரளித்து’ தன்னை ஜெயிலுக்கு அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார். தன்னை போலீசார் கைது செய்தது குறித்து தற்பொழுது ஜாமீனில் வெளிவந்த ரவீந்தர் எமோஷனலாக கூறியுள்ள இந்த பேட்டியானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil)

author avatar