மனதை தொடும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. வெறும் 500 ரூபாய் கட்டணம் செலுத்த முடியாததால் 15 நாட்கள் பள்ளிக்கு செல்ல தவறிய ஒரு பெண்ணின் கதையை தான் இந்த வீடியோ வெளிக்காட்டுகிறது. குடும்பத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் பள்ளிக்கு செல்வது இனி சாத்தியம் இல்லை என்று நினைத்த அந்தப் பெண் வருத்தத்துடன் இருந்துள்ளார். வேறு வழி இல்லாமல் அந்தப் பெண் தனது குடும்பத்திற்காக வயலில் வேலை செய்து வந்தார். இதனைத் தொடர்ந்து எந்த தயக்கமும் இல்லாமல் வயல்வெளிக்குச் சென்ற முதல்வர் சேற்றில் வேலை செய்து கொண்டிருந்த மாணவியை அழைத்து ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று கேட்டுள்ளார்.
உடனே அந்த சிறுமி வீட்டில் பணம் இல்லாததால் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை, அவமானம் தான் பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்தது என்று தயக்கத்துடன் கூறுகிறார். இதனை கேட்டதும் பள்ளி முதல்வர், கட்டணம் இல்லாவிட்டாலும் படிப்பு தடைபடாது என்று உறுதி அளித்து கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டேன் என்று கூறி சிறுமியை பள்ளிக்கு அழைத்துள்ளார். இதனைக் கேட்டதும் சிறுமி உணர்ச்சிவசப்பட்டு அழ தொடங்கினார். தலைமையாசிரியர் மாணவியை ஆறுதல் படுத்தி மறுநாள் பள்ளிக்கு வர சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக விற்பனை செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து…
தமிழ் சினிமாவில் ‘உன்னை சரணடைந்தேன்’, ‘ஜெர்ரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும்…
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான விவாதங்களைக் கிளப்பிய 'புதிய சோபா' விவகாரத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்…
சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோரின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான 'கருப்பு' திரைப்படம் மே 14-ஆம் தேதியான இன்று உலகம்…
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியைத் தழுவிய நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை…