நடிகை தபுவுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்.. மறுப்பு தெரிவித்த பிரசாந்த்.. என்ன காரணம் தெரியுமா..?

By Archana

Published on:

தமிழ் சினிமாவில் உச்சத்திற்கு வந்த பல நடிகர்கள் இன்று காணாமல் போனதை நாம் பார்த்திருக்கிறோம். அப்படியான ஒரு நடிகர் பிரசாந்த். ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் பிரசாந்த். குறிப்பாக பெண் ரசிகர்கள் இவருக்கு அதிகம். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை கச்சிதமாக எதார்த்தமாக நடிப்பதில் வல்லவர். அப்படி வளர்ந்து வந்த காலத்தில் திடீரென அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவியதால், சினிமாவில் இருந்தே சிறிது காலம் ஓய்வு எடுத்து விட்டார் பிரசாந்த்.

   

குடும்ப வாழ்க்கையிலும் சரியான பிடிமானம் இல்லாமல் போனவர், மீண்டும் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் மீண்டும் ஹீரோவாக வலம் வரலாம் என எண்ணி சில படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் அவருக்கு கைக் கொடுக்கவில்லை. ஆகையால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழிகளிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த அந்தாதூண் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் கிடப்பில் உள்ளது.

இந்த நிலையில், நடிகை தபுவுடன் அவர் நடிக்க மாட்டேன் என 2000-ம் ஆண்டே கூறியிருக்கிறார் பிரசாந்த். 2000-ம் ஆண்டு இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் படம் கண்டு கொண்டேன், கண்டுகொண்டேன். ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ், மோகன்லால், அஜித் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்த இந்தப் படத்தில், முதலில் பல நடிகர் நடிகைகளிடம் பேசப்பட்டுள்ளது. பிரபு தேவா, மஞ்சுவாரியர், சௌந்தர்யா, பார்த்திபன் என பலரிடம் இப்படத்தில் நடிக்க கேட்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க பிரசாந்திடமும் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பு வெளியான ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி போட்டு நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்ததால் மீண்டும் அவருடன் வேண்டுமானால் ஜோடி சேர்கிறேன், தபுவுடன் ஜோடி சேர முடியாது எனக் கூறி அந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம் பிரசாந்த். அவர் மறுத்தப் பிறகு தான் அந்த வாய்ப்பு அஜித்திற்கு கிடைத்துள்ளது. இன்று வரையிலும் அஜித்தின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இந்தப் படம் இருக்கும்.

author avatar
Archana