தண்டேவாடாவை சேர்ந்தவர் லக்மா குஞ்சம், இவரது முதல் மனைவி குமே குஞ்சம். இவர் இருவரும் சேர்ந்து லக்மாவின் இரண்டாவது மனைவியை கொல்ல முயன்றனர். அந்தப் பெண்ணின் அந்தரங்க பகுதியில் ரசாயனத்தை ஊற்றி, அவரது கழுத்தில் துண்டை போட்டு நெரித்து, கடினமான பொருளால் தாக்கினர். அவர் இறந்து விட்டதாக நினைத்து, இருவரும் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடினர்.
இதைத் தொடர்ந்து லக்மா குஞ்சத்தின் இரண்டாவது மனைவி போலீசில் புகார் தெரிவித்தார். அதில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு, தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பொழுது, அடையாளம் தெரியாத சிலர், இந்த செயலை செய்ததாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் தம்பதியினரை அழைத்து விசாரித்தனர். அப்பொழுது அவர்களின் வாக்குமூலம் முன்பின் முரணாக இருந்த நிலையில், மேலும் கடுமையாக விசாரிக்கும் பொழுது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
லக்மாவின் இரண்டாவது மனைவி, தனது நிலத்தை வேறு ஒருவருக்கு விவசாயத்திற்காக கொடுத்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை அவள் அருகில் வர அனுமதிக்கவில்லை. இந்த பகை காரணமாக, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என ஒப்புக்கொண்டனர். ஆகஸ்ட் 19ஆம் தேதி, போலீசார் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, அவர்களை சிறையில் அடைத்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…