தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இதனிடையே சமூக நீதியை முதல்வர் ஸ்டாலின் பின்பற்றுகிறார் என்றால் விசிக தலைவர் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, அதிமுக மற்றும் பாஜகவை பற்றியே பேசிக் கொண்டிருக்கும் திமுக அரசு மக்கள் பிரச்சனையை பற்றி கவலைப்படுவது கிடையாது.
இந்தியாவிலேயே பாதாள சாக்கடை சுத்தம் செய்வதில் அதிகமான உயிரிழப்பு தமிழகத்தில் தான் நடைபெறுகிறது. அதனைப் போலவே சமூக நீதியை பற்றி பேசும் தமிழக அரசு கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அவர்கள் கேட்கும் ஊதியத்தை கொடுக்க மனமில்லாமல் உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றமோ, இலவசங்கள் மற்றும் விளம்பரங்கள் செய்வதற்கு பணம் உள்ளது, செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லையா என கேள்வி கேட்டு தமிழக அரசுக்கு குட்டு வைத்திருக்கிறது.
மக்களுக்கு மத்திய அரசு எந்த நல்லது செய்தாலும் திமுகவுக்கு பிடிப்பதில்லை. சமூக நீதியை முதல்வர் ஸ்டாலின் பின்பற்றுகிறார் என்றால் மீதமிருக்கும் ஆறு மாதத்திற்கு துணை முதல்வர் பதவியை திருமாவளவனுக்கு அவர் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். திமுக கூட்டணி என்ற தேன்கூட்டில் கல் எறிய முயலும் பாஜகவின் நரி தந்திரம் என்ற திமுகவினர் இதனை விமர்சித்து வருகிறார்கள். அதே சமயம் தமிழிசை சௌந்தரராஜன் இன் இந்த பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…