சமூக ஆர்வலராகவும், அரசியல் விமர்சகராகவும் அறியப்பட்ட பிரபல யூடியூபர் மதுர் சத்யா, பெண்கள் அளித்த அடுக்கடுக்கான பாலியல் புகார்களின் அடிப்படையில் பெங்களூருவில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றப் பொறுப்புகளிலிருந்தும் அவர் ஏற்கனவே நீக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரைப் போலீசார் பிடித்துள்ளனர். சேலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பா.ரஞ்சித்தின் ‘நீலம்’ பண்பாட்டு மையத்தின் வழியாகச் சமூகப் பிரச்சனைகள் குறித்துப் பேசிப் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சமூக வலைதளங்களில் விளக்கமளித்த மதுர் சத்யா, தன் தரப்பு நியாயத்தைக் கேட்காமலேயே கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தன் வாழ்வில் நடந்த அனைத்தும் பரஸ்பர சம்மதத்துடனேயே நடந்தவை என்றும் கூறியுள்ளார். மேலும், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். எனினும், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகத் கம்யூனிஸ்ட் அமைப்புகள் அறிவித்துள்ளன. முற்போக்குக் கருத்துகளைப் பேசி வந்த ஒருவர் மீது எழுந்துள்ள இந்த விவகாரம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…
பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…
சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் விஜய்யின் தமிழக…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை…
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு 12 வயது சிறுமிக்கு வளைகாப்பு (Baby Shower) நடத்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும்…