தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவில் செல்வகுமார் (36) என்பவர் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருகின்றார். அதே பிரிவில் 32 வயதான இந்திரா காந்தி என்பவரும் காவலராக வேலை பார்த்து வருகிறார். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்ததால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பழகி வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை வந்துள்ளது. இதனால் கடந்த 17ஆம் தேதி நடு ரோட்டில் வைத்து செல்வகுமார் மற்றும் இந்திரா காந்தி சண்டையிட்டுள்ளனர்.
இந்த பிரச்சனை வெளியே தெரிந்ததால் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் திருச்செந்தூருக்கும் இந்திராகாந்தி புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும் மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனிடையே இந்திரா காந்தியை மொபைலில் தொடர்பு கொண்ட செல்வகுமார், நேற்று உன் கதையை முடித்து இருக்கணும், தப்பிச்சிட்ட, இன்னொரு முறையும் இதே மாதிரி நடக்கும்னு எதிர்பார்க்காத, பின்னாடி ஒருத்தன் வந்து வெட்டுவான், நான் உன் தலையில் வெட்டுவேன்.
உன் புருஷன் கிட்ட சொல்லி உன் மகனை பத்திரமாக பார்த்துக்க சொல்லு. எப்ப நான் எப்படி இருப்பேன் என தெரியாது. உன் சாவு எப்போவாக இருந்தாலும் அது என் கையில்தான் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக இந்திரா காந்தி போலீஸ் இல் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். போக்குவரத்து காவலர் பெண் காவலரிடம் பேசிய போன் கால் ரெக்கார்ட் வெளியாகி தற்போது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக-வின் 25 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்த விவகாரம், தற்போது ஒரு சிக்கலான சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.…
தமிழக அரசியலில் 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற கோஷத்தை முன்வைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போது ஒரு…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தின் தொடக்கமாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வரும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பொறுப்பேற்று ஒரு வாரத்திற்கு மேலாகியும், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்னும் ஒதுக்கீடு…