வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேணு. இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்க வருகிறார். நேற்று வேணு தனது 4 வயது மகன் முகேஷை உணவு இடைவெளிக்காக பள்ளியில் இருந்து அழைத்து வந்தார். அவர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது திடீரென வந்த மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி முகேஷை கடத்தி சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த சம்பவம் குறித்து வேணு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிறுவனை கடத்தி சென்ற கார் மாதனூர் பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதி மேம்பாலம் அருகே நின்றது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவனை மீட்டனர். சிறுவனை கடத்தி சென்றவர்கள் யார்? எதற்காக கடத்தி சென்றார்கள் என்பது குறித்த தகவல் தெரியவில்லை. கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் போலீசார் சிறுவனை மீட்டனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் பதவிகளை…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய்…
தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…
அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…
தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா…
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத அதிமுகவிற்கு, அடுத்தடுத்து விழும் அடிகள் அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப்…