2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத் (TVK) தலைவர் நடிகர் விஜய் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இது குறித்துச் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரும், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், விஜய்யின் அரசியல் வருகையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்க்குத் தமிழக அரசியல் சூழல் குறித்தோ, மக்களின் கலாச்சாரம் மற்றும் தேவைகள் குறித்தோ எந்தப் புரிதலும் இல்லை என்று அவர் சாடியுள்ளார்.
திரையுலகப் புகழை வைத்து மட்டும் அரசியலில் வென்றுவிட முடியாது எனக் குறிப்பிட்ட பியூஷ் கோயல், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பல ஆண்டுகள் மக்களுக்காகப் பணியாற்றி, அரசியல் அனுபவம் பெற்ற பிறகே முதலமைச்சர்களாக உயர்ந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டினார். நடிகர் விஜய் தற்போது ஒரு கனவு உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கேலி செய்த அவர், ரசிகர்களின் பலம் என்பது எப்போதும் வாக்குகளாக மாறாது என்பதற்கு விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் பயணங்களே சாட்சி என்று ஒப்பிட்டுப் பேசினார்.
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வரவிருக்கும் தேர்தலில் வெறும் “வாக்குகளைப் பிரிக்கும்” (Vote Cutter) கட்சியாக மட்டுமே இருக்குமே தவிர, அவர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று கோயல் தெரிவித்தார். மேலும், இக்கட்சியால் 2026 தேர்தலில் 3 அல்லது 4 இடங்களைக் கூடத் தாண்ட முடியாது என்று அவர் கணித்துள்ளார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் ஒரு சிறிய முயற்சியாக முடிந்துவிடும் என்றும், தமிழக மக்கள் அனுபவமற்ற தலைவர்களை எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
அதே வேளையில், தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஊழலில் ஊறிப்போயுள்ளதாக விமர்சித்த பியூஷ் கோயல், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மிகவும் வலுவாக இருப்பதாகவும், தொகுதிப் பங்கீடுகள் சுமுகமாக முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார். 2026 தேர்தல் தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…