கிரிக்கெட் வீரருடன் நெருக்கம்… ராஷ்மிக்காவை போலவே கிரிக்கெட் வீரர் சச்சின் மகளின் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு..

By Sumathi

Updated on:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் அவருக்கு சாரா, அர்ஜூன் என்ற வளர்ந்த பிள்ளைகள் உள்ளனர். மும்பையில் குடும்பத்துடன் வசித்து வரும் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணி சார்ந்த முக்கிய அமைப்புகளில் பொறுப்புகளில் இருப்பவர். ஐபிஎல் போட்டிகளில், மும்பை அணி ஆதரவாளராக செயல்படுவது வழக்கம்.

Sara

   

சினிமா நடிகர்களை போலவே கிரிக்கெட் வீரர்களும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் சுப்மன் கில், சச்சின் மகள் சாரா இருவரும் காதலிப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. எந்த மைதானத்தில் சுப்மன் கில் விளையாடினாலும், ரசிகர்களில் ஒரு தரப்பினர் சாரா, சாரா என குரல் எழுப்புவது நடந்து வருகிறது. இப்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பி இருக்கிறது.

Sara

அதாவது சுப்மன் கில், சாரா இருவரும் நெருக்கமாக அமர்ந்திருப்பது போலவும், அதில் சுப்மன் கில் தோள்மீது கை போட்டபடி சாரா இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இது உண்மையில் எடுக்கப்பட்டது அல்ல போலி என்றும், சாரா, அவரது தம்பி அர்ஜூன் டெண்டுல்கருடன் இருக்கும் புகைப்படத்தை மார்பிங் செய்து, சுப்மன் கில் முகத்தை மாற்றி இருப்பதாகவும், புகைப்படத்தை ஆதாரமாக பதிவிட்டுள்ளனர். சமீபத்தில் இதே போல் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நடிகை ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி வீடியோ ஒன்று வைரலானது. அதே போல், இதுவும் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

author avatar
Sumathi