தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது தேர்தல் பிரசாரத்தின்போது கட்சி வண்ணங்கள் பூசப்பட்ட புறாக்களைப் பறக்கவிட்டது தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக கட்சியின் கொடி நிறத்தை ஒத்த சாயங்களை புறாக்களின் உடலில் பூசி, அவற்றை மேடையில் இருந்து பறக்கவிட்ட செயலுக்கு விலங்கு நல அமைப்பான ‘பீட்டா இந்தியா’ (PETA India) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விஜய்க்கு கடிதம் எழுதியுள்ள அந்த அமைப்பு, அரசியல் லாபத்திற்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ வாயில்லாப் பிராணிகளைப் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும், அந்த கடிதத்தில் விலங்குகளும் பறவைகளும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது சித்தாந்தத்திற்கும் சொந்தமானவை அல்ல என்பதை பீட்டா சுட்டிக்காட்டியுள்ளது. பறவைகளின் உடலில் ரசாயன வண்ணங்களைப் பூசுவது அவற்றின் இறக்கைகளுக்கும், உடல்நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு, இது போன்ற செயல்கள் பறவைகளைத் துன்புறுத்துவதற்குச் சமம் என்றும் பீட்டா கவலை தெரிவித்துள்ளது. எதிர்காலப் பிரசாரங்களில் இது போன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும், அரசியல் களத்தில் இருந்து விலங்குகள் மற்றும் பறவைகளை விடுவிக்குமாறும் தவெக தலைவருக்கு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் மூத்த அரசியல் ஆளுமையும், முன்னாள் அமைச்சருமான 99 வயது டாக்டர் எச்.வி. ஹண்டே, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில்…
மார்கஸ் வெஸ்ஸன் (Marcus Wesson) எனும் கொடூர மனிதனின் இந்தச் செயல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தையே உலுக்கிய ஒரு கருப்பு…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்திய 'கோல்ட் கார்டு' (Gold Card) விசா திட்டத்தில், இதுவரை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வந்த திரை நட்சத்திரங்களின் உடை அலங்காரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கருத்தானூரைச் சேர்ந்த சத்யா (30), தனது கணவரைப் பிரிந்து இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.…
ஹரியானா மாநிலம் குருகிராமில் சந்தேகத்தினால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…