பெரும் நிலச்சரிவு.. சாதுரியமாக செயல்பட்டு 67 பேரின் உயிரை காப்பாற்றிய நாய்.. நெகிழ வைக்கும் சம்பவம்..!

Spread the love

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் இறுதியில் ஏற்பட்ட மேல வெடிப்பு காரணமாக கன மழை பெய்து வந்தது. கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த ஜூன் இருபதாம் தேதி முதல் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்படியான நிலையில் நாய் ஒன்று சாதுரியமாக செயல்பட்டதால் 67 பேர் நிலச்சரிவிலிருந்து உயிர் தப்பிய சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு ஒரு மணி அளவில் மண்டி மாவட்டத்தின் சியாநதி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்குள்ள வீடுகள் தரைமட்டமானது.

இது தொடர்பாக பகுதியை சேர்ந்த நரேந்திரா என்பவர் கூறுகையில், நள்ளிரவில் இரண்டாவது தளத்திலிருந்து என்னுடைய நாய் குறைக்க ஆரம்பித்தது. நான் அங்கு சென்று பார்த்ததும் சுவற்றில் விரிசல் ஏற்பட்டு அது வழியாக தண்ணீர் உள்ளே வந்து கொண்டிருந்தது. உடனே கீழே இருந்தவர்களை எழுப்பி வெளியேற சொன்னேன். மேல கிராமத்தில் உள்ள மற்றவர்களையும் எழுப்பி வெளியேறுமாறு அறிவுறுத்தேன். நாங்கள் கிளம்பிய சிறிது நேரத்திலேயே அந்த இடத்தில் பெரும் நிலசரிவு ஏற்பட்டது.

இதில் ஐந்து வீடுகளைத் தவிர மற்ற அனைத்து வீடுகளும் நிலச்சரிவில் தரைமட்டமாகியது. 20 குடும்பங்களை சேர்ந்து 67 பேர் உயிர் தப்பினோம் என்று அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வீடுகளை இழந்த அனைவரும் கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். நள்ளிரவில் சாதுர்த்தியமாக செயல்பட்டு 67 பேரின் உயிரைக் காப்பாற்றிய நாயின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

10 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

10 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

11 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

11 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

12 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

12 மணத்தியாலங்கள் ago