மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.
மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், புறநகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்னும், அரசின் உதவி சென்றடையவில்லை. வெள்ளம் முழுமையாக வடியாததால் பல பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. சென்னையின் பல இடங்களில் தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். அந்தவகையில் ‘Indian Air Force’ தற்பொழுது ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தில் தவிப்பவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கும் வீடியோவானது இணையத்தில் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
தமிழ் சினிமாவில் இருக்கும் திறமை மிகு நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். தன்னுடைய ஒரு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார்.…
இந்தியாவில் ஓடிடி-யில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை பற்றிய தகவலை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ளலாம். இன்றைய சினிமாவில்…
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கருணாஸ். இவர் நடிகர் மட்டுமல்ல .ஒரு இசையமைப்பாளரும்…
பிரபல நடிகர்களின் பழைய படங்கள் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில் தளபதி விஜயின் கில்லி படம் ரீ…
நடிகை ரிது வர்மா வேலையில்லா பட்டதாரி படத்தில் இரண்டாம் பாகத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். முன்னதாக…
தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்தவர் நடிகர் பிரசாந்த்.…