தமிழக அரசியல் களத்தில் திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அண்மையில் வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய பண்ருட்டி தொகுதி தற்போது விசிக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் விசிக மொத்தம் 8 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், அதில் திருப்போரூர் மற்றும் பண்ருட்டி ஆகிய இரு தொகுதிகள் பொதுத் தொகுதிகளாகும்; மீதமுள்ள 6 தொகுதிகள் தனித் தொகுதிகளாகும். பண்ருட்டி தொகுதி விசிக-வுக்கு வழங்கப்பட்டிருப்பது, வடதமிழக அரசியல் கணக்குகளில் ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
பண்ருட்டி தொகுதியைப் பொறுத்தவரை வேல்முருகன் அங்கு மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராகத் திகழ்ந்து வருகிறார். அவர் 2001, 2006 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அந்தத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பலமுறை வெற்றிக்கொடி நாட்டிய ஒரு மூத்த தலைவர் கூட்டணியிலிருந்து வெளியேறிய நிலையில், அந்தப் பலமான கோட்டையை விசிக எப்படிக் கைப்பற்றப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…