“நான் தினமும் தூங்குறதுக்கு முன்னாடி சாமிகிட்ட இதுதான் வேண்டுவேன்… ஆனா இது இப்ப நடக்காம போயிடுச்சு..” வருத்தத்துடன் பேசிய பாண்டியன் ஸ்டார்ஸ் ஜீவா… வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடித்து வந்தனர். பாசத்தையும், ஒற்றுமையையும், கூட்டுக் குடும்பத்தை பற்றியும் குறிப்பிடுவதால் இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்று இதன் முதல் பாகம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2 பாகம் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது.

   

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 ல்  ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான்  நடிகர் வெங்கட் ரங்கநாதன். இவர் இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளார். நடிகர் வெங்கட் ரங்கநாதன் முதன்முதலாக சின்னத்திரையில் தொகுப்பாளராக  அறிமுகமானார்.

இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்ற சீரியல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவர் மற்ற சீரியல்களில் நடித்து  பிரபலமானதை விட, தற்பொழுது இவர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஏற்று நடிக்கும் ஜீவா கதாபாத்திரம் மூலம் தான் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொண்டாடப்பட்டு வருகிறார்.  தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். தற்பொழுது மனமுடைந்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் குறிப்பாக ‘ விஜய் அண்ணா கூட ஒரு படத்துலயாவது கூட நடிக்கணும்னு தினமும் நைட் தூங்கும் போது வேண்டிப்பேன். ஆனா விஜய் அண்ணா அறிக்கை வெளியிட்டிருக்காரு இனிமேல் நான் படத்துல நடிக்க மாட்டேன்னு . இதைக்கேட்டு நான் ரொம்ப மனசு வருத்தமாயிருக்கு’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…