சூழ்ச்சியில் சிக்கிய மருமகள்.. வீட்டை விட்டு வெளியேறியதால் சுக்குநூறாக உடையும் குடும்பம்.. உண்மை வெளிவருமா..?

By Priya Ram

Published on:

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எதிர்பாரா சம்பவங்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் ஒருவர் வீட்டை விட்டு வெளியே செல்வதால் குடும்பம் சுக்குநூறாக உடைந்தது. அதாவது ஜனார்த்தனனை அவரது இளைய மருமகன் கத்தியால் குத்துகிறார். அந்த சமயம் போலீசார் அங்கு செல்கின்றனர். தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு ஜீவா மற்றும் கதிர் இருவரும் கலவரத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறுகிறார்.

இதனால் ஜீவாவையும், கதிரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இருவரையும் வெளியே எடுப்பதற்காக மூர்த்தி எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைகிறது. இந்த சூழலில் தனது தந்தையை பார்ப்பதற்காக மீனா மருத்துவமனைக்கு செல்கிறார். அவர் எதேர்ச்சியாக முல்லையின் மகன் பேசுவதை கேட்டு விடுகிறார். அதாவது போலீசாரிடம் கலவரத்தை ஏற்படுத்தியது ஜீவா தான் என்று அவர் பொய் வாக்குமூலம் கொடுக்கிறார்.

   

இதனை கேட்டதும் தனது தந்தையின் நிலைமைக்கு ஜீவாவும் கதிரும் தான் காரணம் என முடிவு செய்து மீனா பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு விரைந்து சென்று தனது மகள் மற்றும் தனது ஆடைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்படுகிறார். எல்லோரும் அவரை தடுத்து நிறுத்தி வீட்டில் இருந்து வெளியேறுவதற்கான காரணத்தை கேட்கின்றனர். அதற்கு இந்த வீட்டில் இருக்கவே பயமாக இருக்கிறது என கூறிவிட்டு மீனா அங்கிருந்து சென்று விடுகிறார்.

ஏற்கனவே குடும்பம் பிரிந்த நிலையில் இப்போதுதான் ஒன்று சேர்ந்தார்கள். அப்படி இருக்க புதிய பிரச்சனை வெடித்து இருக்கிறது. ஜனார்த்தனன் கண்விழித்து உண்மையை சொன்னால் மட்டும் தான் ஜீவா மீது எந்த தப்பும் இல்லை என்பது தெரியவரும். அதன் பிறகு தான் மீனாவுக்கும் தான் செய்தது தவறு என்பது தெரியவரும். இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் சந்தோசமாக இணைந்து வாழ இருக்கிறார்கள்.

author avatar
Priya Ram