பொருளாதார நெருக்கடியிலும், எல்லையில் பதற்றத்திலும் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த சர்ச்சைக்குரிய மூன்று பயங்கரவாதிகளைத் தூதுவர்களாகக் காபூலுக்கு அனுப்பியுள்ளது. சர்வதேச அளவில் தேடப்படும் பயங்கரவாதிகளான ஃபஸ்லூர் ரெஹ்மான் கலீல், அப்துல்லா ஷா மஜார் மற்றும் காரி சஜித் உஸ்மான் ஆகியோரை ‘மதத் தலைவர்கள்’ என்ற பெயரில் பாகிஸ்தான் அரசு களமிறக்கியுள்ளது. தங்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும்படி தலிபான்கள் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நிலையில், தலிபான்களின் மொழியிலேயே பேசி அவர்களைச் சமாதானப்படுத்தவே இந்த விபரீத முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளது.
தலிபான்களுடன் போரிடும் அளவுக்கு வலிமை இல்லாததால், பயங்கரவாதிகளை வைத்தே அமைதி பேச முற்படுவது ‘தீயை அணைக்கப் பெட்ரோல் ஊற்றுவதற்குச் சமம்’ என்று சர்வதேச வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர். பயங்கரவாதத்தை ஒழிக்க நிதி பெறும் பாகிஸ்தான், அதே பயங்கரவாதிகளைத் தூதுவர்களாகப் பயன்படுத்துவது அதன் இரட்டை வேடத்தையும், நயவஞ்சகத்தையும் உலகிற்கு மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் தற்கொலை முயற்சி பாகிஸ்தானுக்கு விபரீதத்தையே தரும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…