பொருளாதார நெருக்கடியிலும், எல்லையில் பதற்றத்திலும் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த சர்ச்சைக்குரிய மூன்று பயங்கரவாதிகளைத் தூதுவர்களாகக் காபூலுக்கு அனுப்பியுள்ளது. சர்வதேச அளவில் தேடப்படும் பயங்கரவாதிகளான ஃபஸ்லூர் ரெஹ்மான் கலீல், அப்துல்லா ஷா மஜார் மற்றும் காரி சஜித் உஸ்மான் ஆகியோரை ‘மதத் தலைவர்கள்’ என்ற பெயரில் பாகிஸ்தான் அரசு களமிறக்கியுள்ளது. தங்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும்படி தலிபான்கள் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நிலையில், தலிபான்களின் மொழியிலேயே பேசி அவர்களைச் சமாதானப்படுத்தவே இந்த விபரீத முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளது.
தலிபான்களுடன் போரிடும் அளவுக்கு வலிமை இல்லாததால், பயங்கரவாதிகளை வைத்தே அமைதி பேச முற்படுவது ‘தீயை அணைக்கப் பெட்ரோல் ஊற்றுவதற்குச் சமம்’ என்று சர்வதேச வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர். பயங்கரவாதத்தை ஒழிக்க நிதி பெறும் பாகிஸ்தான், அதே பயங்கரவாதிகளைத் தூதுவர்களாகப் பயன்படுத்துவது அதன் இரட்டை வேடத்தையும், நயவஞ்சகத்தையும் உலகிற்கு மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் தற்கொலை முயற்சி பாகிஸ்தானுக்கு விபரீதத்தையே தரும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…