Categories: சினிமா

‘சிவாஜிய நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கல’… வெளிநாட்டு ரசிகரின் கேள்விக்கு பத்மினியின் பதில் என்ன தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது அவர் நடித்த பல நாடகங்கள் தமிழகத்தின் பல மூளைகளில் அரங்கேறி கணேசன் (அப்போது சிவாஜி என்ற பட்டம் கொடுக்கப்படவில்லை) புகழைப் பரப்பின.

அதன் பராசக்தி என்ற ஒரே படம் அவரை தமிழ்நாடு முழுவதும் அறிந்த நடிகராக்கியது. அதன் பின்னர் தன் வாழ்நாளில் அவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்துக் கலக்கினார்.

சிவாஜி கணேசன் தன்னுடைய சினிமா கேரியரில் அதிக படங்களில் சேர்ந்து நடித்தது பத்மினியோடுதான். இருவரும் இணைந்து 59 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சிவாஜி சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே பத்மினி சினிமாவில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தார்.

அப்போது சிவாஜி எம் ஆர் ராதாவின் குழுவில் ஒருவராக நாடகங்களில் நடித்து வந்துள்ளார். எம் ஆர் ராதாவின் இழந்த காதல் நாடகத்தைக் காண பத்மினி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். அதைப் பார்க்க வந்த பத்மினியிடம் சிவாஜி கணேசன் “நான் உங்கள் நடிப்புக்கு ரசிகன். உங்களோடு சேர்ந்து ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை” எனக் கூறினாராம். ஆனால் அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 60 படங்களில் இணைந்து நடித்தார்கள்.

இந்த ஜோடியை அந்தளவுக்கு ரசிகர்கள் ரசித்தார்கள். இவர்கள் இருவரும் திரையில் நடிப்பதைப் பார்த்த ரசிகர்கள் அவர்கள் உண்மையிலேயே காதலர்கள் என நினைத்துக் கொள்ளும் அளவுக்கு இருந்தது அவர்கள் கெமிஸ்ட்ரி. ஆனால் பத்மினி வெளிநாட்டுக் காரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். சிவாஜியும் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

ஆனால் பல ஆண்டுகள் கழித்து பத்மினி தான் ஏன் சிவாஜியை திருமணம் செய்துகொள்ளவில்லை என்று எழுத்தாளர் அ முத்துலிங்கத்திடம் தெரிவித்தாராம். கனடாவுக்கு நாட்டிய நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக சென்ற பத்மினியை அங்குள்ள தமிழர்கள் கூடி வரவேற்றுள்ளனர். அப்போது அங்கிருந்த தமிழ்ப் பெண் ஒருவர் ஏன் நீங்கள் சிவாஜியை திருமணம் செய்துகொள்ளவில்லை எனக் கேட்டாராம். அதற்கு ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார் பத்மினி.

ஆனால் அங்கிருந்து மீண்டும் இந்தியா கிளம்பும்போது எழுத்தாளர் அ முத்துலிங்கத்திடம் மட்டும் தனியாக “அவர் கள்ளர்… நான் நாயர் வீட்டில் பிறந்தவள். எப்படி எங்க கல்யாணம் நடக்க ஒத்துக்குவாங்க” என சலிப்புடன் சொன்னாராம். இதை அ முத்துலிங்கம் தன்னுடைய அங்க இப்ப என்ன நேரம் என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

vinoth

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

9 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

9 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

9 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

10 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

10 மணத்தியாலங்கள் ago