தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கும் விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்கள் அதிகாலை 4:00 மணி அல்லது ஐந்து மணிக்கு வெளியாவது வழக்கம். இதில் டிக்கெட்டின் விலை 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்வார்கள். இதனால் படத்தின் லாபம் அதிகரிக்கும். எத்தனை ஆயிரம் என்றாலும் விஜய், அஜித் ரசிகர்கள் அதனை விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள்.
இதனால் அந்த சிறப்பு காட்சிகள் என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகின்றது. அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பது என்பது அவர்களுக்கு மிகப்பெரிய ஆனந்தம். எனவே லியோ படத்திற்கும் அப்படி அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு மனு வைத்திருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஐந்து காட்சிகளுக்கு அனுமதி அளித்து அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது.
ஆனால் காலை நான்கு மணிக்கு காட்சிகள் இருக்கா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் முதல் காட்சி 9 மணிக்கு துவங்கி கடைசி காட்சி இரவு 1:30 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தயாரிப்பாளர் தரப்புக்கும் விஜய் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…