கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் வைலாமுர் கிராமத்தை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் புது பெண் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கணவர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புது பெண் எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர் தன்னுடைய மனைவியின் கர்ப்பத்திற்கு காரணமானவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் புதுப்பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணம் அவருடைய தாய் மாமன் என்பது தெரிய வந்தது. அதாவது புதுப்பெண்ணின் தாய்மாமன் லிங்கமுத்து என்பவருக்கு அடிக்கடி வலிப்பு வரும் என்பதால் அவர் தனது அக்கா வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவர் தனது அக்கா மகளான புது பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனால் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து லிங்க முத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் லிங்கமுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணமான இரண்டரை மாதத்தில் மனைவி எட்டு மாதம் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கணவர் அறிந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…