கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் வைலாமுர் கிராமத்தை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் புது பெண் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கணவர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புது பெண் எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர் தன்னுடைய மனைவியின் கர்ப்பத்திற்கு காரணமானவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் புதுப்பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணம் அவருடைய தாய் மாமன் என்பது தெரிய வந்தது. அதாவது புதுப்பெண்ணின் தாய்மாமன் லிங்கமுத்து என்பவருக்கு அடிக்கடி வலிப்பு வரும் என்பதால் அவர் தனது அக்கா வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவர் தனது அக்கா மகளான புது பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனால் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து லிங்க முத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் லிங்கமுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணமான இரண்டரை மாதத்தில் மனைவி எட்டு மாதம் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கணவர் அறிந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2001-ல் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம்…
புதிய தொழிலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு…
சின்னத்திரை நடிகை மன்யா ஆனந்த், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் தன்னை ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக தொடர்புகொண்டு, ஒப்பந்தம் செய்ய…
வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில்…
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…