#image_title
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா கடந்த 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அடுத்தடுத்து நயன்தாரா நடித்த சந்திரமுகி, வல்லவன், யாரடி நீ மோகினி, வில்லு, ஆதவன் ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த 2013-ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் உருவான ராஜா ராணி திரைப்படம் நயன்தாராவுக்கு நல்ல திருப்பு முனையாக அமைந்தது. அதன் பிறகு ஆரம்பம், தனி ஒருவன், நானும் ரவுடிதான், விசுவாசம், பிகில், தர்பார் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நயன்தாரா நடிப்பார்.
கடைசியாக ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நயன்தாரா என்ட்ரி கொடுத்தார். நானும் ரவுடிதான் படத்தில் இணைந்து நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா விக்னேஷ் தம்பதியினர் தங்களது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வபோது பதிவிடுவார்கள். தற்போது நயன்தாரா தனது வீட்டு மொட்டை மாடியில் புதிய ஆபீஸ் கட்டிடம் கட்டியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…