Categories: CINEMA

மிகப்பெரிய ஹிட்டான ‘நாட்டாமை’ படத்தில் இப்படி ஒரு மிஸ்டேக்கா..? இந்த சீனை யாராவது கவனிச்சீங்களா?

1994-ம் ஆண்டு ஒரு திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையே திரும்பி பார்க்க வைத்தது என்றால் அது நாட்டாமை. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்று வரையிலும் 90ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு ஃபேவரைட் படமாக இப்படம் இருந்து வருகிறது. தொலைக்காட்சிகளில் இப்படம் இன்று ஒளிப்பரப்பானாலும் அதனை முழுவதுமாக அமர்ந்து பார்க்கும் ரசிகர்கள் இன்றைக்கும் உண்டு.

#image_title

சரத்குமார் இரட்டை வேடத்திலும், விஜயகுமார் அப்பாவாகவும், மீனா, குஷ்பூ, பொன்னம்பலம், மனோரம்மா, கவுண்டமணி, விணுசக்கரவர்த்தி என பலர் நடிப்பில் இப்படம் வெளியானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் நூறு நாட்களை கடந்து வெற்றிக்கரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது நாட்டாமை. பரம்பரையாக நாட்டாமையாக வாழ்ந்து வரும் விஜயகுமார் குடும்பத்தில், தனது தங்கையின் கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டு, அவர் குடும்பத்தை 18 ஆண்டுகள் ஊரை விட்டு தள்ளி வைக்கின்றனர்.

#image_title

அதன் பிறகு விஜயகுமாரின் மூத்த மகன் சரத்குமார் நாட்டாமையாக அந்த நாற்காலியில் அமர, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், தனது தம்பியின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க, ஒரு கட்டத்தில் அது தவறான தீர்ப்பு என்பது தெரியவர, உடனே உயிரை விடுகிறார் நாட்டாமை சரத்குமார். குடும்பம் குடும்பமாக கொண்டாடிய இந்தத் திரைப்படத்தில் ஒரு தவறு நடந்திருகிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இது குறித்து இயக்குநரும் நடிகருமான சித்ரா லக்‌ஷ்மணன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை நேர்காணல் எடுத்தப் போது, நாட்டாமை படத்தில் இருந்த ஒரு காட்சியை சுட்டிக் காட்டியிருப்பார்.

#image_title

அதாவது ஒரு காட்சியில் நாட்டாமையாக இருக்கும் சரத்குமாரிடம், நடிகை மீனா அவமரியாதையாக நடந்து கொள்வார். பிறகு ஒரு கட்டத்தில் மீனாவின் தந்தையான விணு சக்ரவர்த்தி நாட்டாமையை சந்திக்கும் போது மிக பயபக்தியுடன் கைக்கட்டி மரியாதையுடன் தலை நிமிராது பேசி செல்வார். இதனை பார்த்த மீனா, ஒரு பணக்காரர், தொழிலதிபர், 100 பேருக்கு வேலை தருபவர், இப்படி தனது கணவரின் அண்ணன் முன் கைக்கட்டி பேசுவதை பார்த்து திருந்திப் போவார். ஆனால் இந்த மரியாதையை அவர், திருமணத்தின் போதே கண்டிருக்க மாடாரா எனக் கேட்டிருப்பார் இயக்குநர் சித்ரா லக்‌ஷ்மணன், அதற்கு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அதற்காகத் தான் திருமணத்தையே காட்டாமல் பாட்டிலேயே முடித்ததாக கூறியிருப்பார்.

#image_title

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

4 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

4 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

6 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

6 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

9 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

9 hours ago