“தமிழக அரசு மருத்துவமனைகளில் 4,724 செவிலியர் பணியிடங்கள்”…. விண்ணப்பிக்க செப்டம்பர் 25 கடைசி நாள்…. முழு விவரம் உள்ளே….!

Spread the love

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ நிறுவனங்களில் காலியாக உள்ள 4,724 ஒப்பந்த மற்றும் தற்காலிகச் செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தேசிய சுகாதார இயக்கம் (NHM) வெளியிட்டுள்ளது. பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளின் கீழ் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற தனியார் நர்சிங் கல்லூரியில் GNM (General Nursing and Midwifery) அல்லது B.Sc Nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்திய நர்சிங் கவுன்சிலின் அங்கீகாரத்துடன் தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மகப்பேறு செவிலியர்கள் கவுன்சிலில் (Tamil Nadu Nurses and Midwives Council) கட்டாயமாகப் பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 50 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் nhm.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார அலுவலக முகவரிக்கு வருகிற செப்டம்பர் 25, 2026 அன்று மாலை 5:00 மணிக்குள் சென்று சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

Nanthini

Recent Posts

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

3 minutes ago

அடப்பாவி… நீயெல்லாம் மனுஷனா?… குடும்ப தகராறில் மாமனாரை… கட்டையால் அடித்த கொடூரம்… தடுக்க வந்த மனைவிக்கு தர்ம அடி… ஆந்திராவை உலுக்கிய கணவனின் வெறிச்செயல்…!

ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…

3 minutes ago

ஐயோ கடவுளே… வீட்டில் திடீரென பாய்ந்த காட்டுப்பன்றி… நாற்காலியோடு தூக்கி வீசப்பட்ட முதியவர்… ஷாக்கிங் CCTV வைரல் வீடியோ… நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்…!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி அருகே உள்ள கோரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம். கே. அப்துல் காதர் (59).…

19 minutes ago

“பாட்டி வீட்டுக்கு போக மாட்டேன்…” தாயின் அழுத 12 வயது சிறுவன்… 2 ஆண்டுகளாக அத்துமீறிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!

ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது சொந்தத் தாய் வழி பாட்டியே…

22 minutes ago

ஐயோ… சாமி கும்பிட்டு வந்த இடத்தில்… இப்படி ஒரு சோதனையா?… நொறுங்கி கிடந்த வாகனத்தைப் பார்த்து… நிலைகுலைந்த இன்ஸ்பெக்டர்… நெஞ்சை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

ஹரியானா மாநிலம் பல்வால் பகுதியில், கதூ ஷியாம் கோவிலுக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பயணித்த வாகனம் பயங்கர…

35 minutes ago

ச்சீ… வேற பொண்ணோட சுத்துறியா?… கார் போனட்டில் காதலியை… இழுத்துச் சென்று ஏற்றிய கொடூரன்… உ . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கணவன்-மனைவி அல்லது காதலர்களுக்கிடையே ஏற்படும் தகராறுகள் கொடூர சம்பவமாக மாறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த…

39 minutes ago