சிக்கலில் மாட்டிக்கொண்ட நமீதாவின் கணவர், அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தியதாக இருவர் கைதால் பரபரப்பு – என்ன மச்சான்ஸ் இதெல்லாம்?

By Sumathi

Updated on:

நடிகை நமீதா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சரத்குமார், சத்யராஜ், ஜீவன் ஆகியோருடன் அதிக படங்களில் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்துக்கு பிறகு, டிவி சேனல்களில் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக வந்து கலந்துக்கொண்டார். இப்போது, பாஜகவில் இருந்து வருகிறார். பாஜக அரசியல் கூட்டங்களில், பிரசாரங்களில் பங்கெடுத்து வருகிறார். சினிமாவில் சமீபமாக நடிப்பது இல்லை. இவரது கணவர் சௌத்ரி. இவர் இப்போது, ஒரு சிக்கலில் மாட்டியிருப்பதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Actress Namithaசேலத்தில், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் பிரமோசன் கவுன்சில் என்ற தனியார் நிறுவனத்தின் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதில் தமிழ்நாடு சேர்மனாக உள்ள நமீதாவின் கணவர் சௌத்ரி, பாஜக பிரமுகரான நமீதா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். இந்நிலையில், இந்த அமைப்பை சேர்ந்த இருவர், அரசு முத்திரைகளை தவறாக பயன்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Actress Namithaஅதாவது, அந்த தனியார் நிறுவன அமைப்பின் தலைவராக இருப்பவர் முத்துராமன், செயலாளராக இருப்பவர் பஞ்சாபை சேர்ந்த துஷ்யந்த் யாதவ். இதில் முத்துராமன் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் என்று கூறப்படுகிறது. இவர்களது காரில் அசோக சின்னம் பொறித்த பிளேட், தேசியக்கொடி. அரசு முத்திரையிட்ட விசிட்டிங் கார்டு என பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பணமோசடி ஏதும் செய்துள்ளார்களா எனவும் விசாரணை நடந்து வருகிறது. இது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Sumathi