Categories: சினிமா

பாட்டு புடிக்கலைன்னா போயா.. கடுப்பில் ஆர்.கே செல்வமணியை திட்டிய இளையராஜா.. அவரே பகிர்ந்த சுவாரசிய சம்பவம்..

Spread the love

ஆர்கே செல்வமணி தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான திரைப்பட இயக்குனர் ஆவார். செங்கம்பட்டியில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆர்கே செல்வமணி. சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்த ஆர் கே செல்வமணி பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்தார். ஆரம்பத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்தார் ஆர்கே செல்வமணி. 1980 ஆம் ஆண்டு விஜய்காந்தை கதாநாயகனாக வைத்து புலன் விசாரணை என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இருந்தது. சில அரசியல் பெரியோர்களின் தூண்டுதலின் பெயரால் பல பெண்களை கடத்திக் கொன்ற ஆட்டோ ஷங்கரின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாக புலன் விசாரணை திரைப்படத்தை இயக்கியிருப்பார். இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

 

அடுத்ததாக 1991 ஆம் ஆண்டு மறுபடியும் விஜயகாந்த் அவர்களை வைத்து கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ஆனது தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு மரியாதை செய்யும் விதமாக இருந்தது. இந்த கதைக்களம் கொள்ளைக்காரன் வீரப்பனை அடிப்படையாகவும் கொண்டிருந்தது. இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. அந்தப் படத்திற்கு பிறகு தான் விஜயகாந்த் அவர்களை கேப்டன் விஜயகாந்த் என்று மக்கள் அழைக்க தொடங்கினர். தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு செம்பருத்தி, பொன்விலங்கு, கண்மணி, ராஜ முத்திரை போன்ற பல படங்களை எழுதி இயக்கியுள்ளார் ஆர் கே செல்வமணி.

அடுத்ததாக 1994 ஆம் ஆண்டு அதிரடிப்படை என்ற திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கினார். இவரது திரைப்படங்களில் பெரும்பாலானவைகளில் ரோஜா நடித்திருப்பார். 2022 ஆம் ஆண்டு ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆர் கே செல்வமணி. இப்படியான நிலையில் ஆர்கே செல்வமணி சமீபத்தில் அழுத்த பேட்டி ஒன்று இளையராஜா பற்றி பேசியுள்ளார். அதில், என்னோட படத்துக்கு எதுக்கு இளையராஜா பாட்டு எழுதினாலும் நான் பிடிக்கலைன்னு தான் சொல்லுவேன். ஆட்டமா தேரோட்டமா பாட்டு கூட முதலில் எனக்கு பிடிக்கவே இல்லை.

ஒரு கட்டத்தில் இளையராஜா பாட்டு புடிக்கலனா போயா போயா, எது சொன்னாலும் புடிக்கலைன்னு சொல்லிட்டு இருக்க உன் படத்துக்கு எல்லாம் நான் பாட்டு எழுத மாட்டேன் என்று சொல்லி கோபப்பட்டார். அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு இந்த பாட்டு புடிக்கல சோலையம்மா என்று நான் ஒரு படம் எடுக்கிறேன் அதற்கு நீங்கள் தான் பாட்டு எழுதணும் என்று சொன்னேன். அன்னைக்கு நைட் நான் சொன்னதும் மறுநாளே இளையராஜா பாட்டு எழுதி டியூன் போட்டு அன்னைக்கு சாயங்காலமே ட்ரெயினில் டிராக் அனுப்பி வைத்துவிட்டார். அத வச்சு பிஜிஎம் ரெடி பண்ணிட்டோம். அதன் பிறகு மறுநாள் காலை பிளைட்டில் பாட்டும் வந்திருச்சு. அந்த அளவிற்கு இளையராஜா கிட்ட நான் உரிமையோடு நடந்து கொள்வேன் என்று ஆர் கே செல்வமணி பேசியுள்ளார்

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

8 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

8 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

9 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

9 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

9 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

10 மணத்தியாலங்கள் ago