ஐபிஎல்-லில் நடந்த குளறுபடி.. தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

By Mahalakshmi

Updated on:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வருபவர் நடிகை தமன்னா. மும்மையைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பிஸியாக இருந்தார். ஏராளமான விளம்பரங்களில் நடித்த தமன்னா முதலில் அறிமுகமானது பாலிவுட்டில் தான். அதன் பிறகு தெலுங்கில் நடிக்க தொடங்கிய இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

   

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த தமன்னா பின்னர் அந்த அளவுக்கு ஃபார்மில் இல்லை. அதைத்தொடர்ந்து பாகுபலி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது. தற்போது ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் விஜய் வர்மாவை இவர் காதலித்து வருகிறார். சினிமாவை தாண்டி பல விளம்பரங்களில் நடித்து வருகிறார் .

தற்போது நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் ஒன்று அனுப்பி உள்ளது. அதாவது 2023 ஐபிஎல் போட்டிகள் Fairplay என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட வழக்கில் நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் ஒன்று அனுப்பியுள்ளது. அதன்படி நடிகை தமன்னா வரும் ஏப்ரல் 29ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
Mahalakshmi