“கோடாரியால் வெட்டிய 17 வயது சிறுவன்”… மகனுக்காக உயிரையே விட்ட தாய்…. ராசிபுரத்தில் அதிர வைக்கும் சம்பவம்…!

Spread the love

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நிகழ்ந்த ஒரு கொடூரமான தாக்குதல் சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேளுக்குறிச்சியைச் சேர்ந்த 42 வயதான கதிரவன் என்ற ஆட்டோ ஓட்டுநரை, 17 வயது சிறுவன் ஒருவன் முன்விரோதம் காரணமாக கோடாலியால் கழுத்தில் வெட்டியுள்ளான். பொது இடத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் கதிரவன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததைக் கண்டு, அவரது தாய் ஜானகி (65) நிலைகுலைந்து போனார். தன் மகன் படுகாயமடைந்து கிடப்பதைக் கண்ட அதிர்ச்சியில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் ஜானகியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். படுகாயமடைந்த கதிரவன் தற்போது நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மகனின் நிலையைக் கண்டு தாய் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“காப்பாற்ற வேண்டிய போலீஸே இப்படியா?” – பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ந்துபோன சென்னை…!

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலராலேயே…

1 minute ago

“பேச்சுவார்த்தை தோல்வி.. இனி ஆட்டம் வேற மாதிரி”… இஸ்ரேலில் 6500 டன் ஆயுதங்களை குவித்த அமெரிக்கா.. நடுங்கும் ஈரான்…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானிய கடற்படையை…

9 minutes ago

பகீர் ரெய்டு..! மதுக்கடையைப் புகுந்து துவம்சம் செய்த கிராமத்து தாய்மார்கள்… குடிகார கணவன்மார்களால் வந்த வினை.. அதிரும் உபி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மதுக்கடையால் தங்கள் குடும்பங்கள் சீரழிவதைக் கண்டு கொதித்தெழுந்த பெண்கள்,…

15 minutes ago

படுக்கைக்கு அழைத்த ‘பெண் அதிகாரி’… மறுத்த இந்திய ஊழியருக்கு நேர்ந்த கதி? உலகையே அதிரவைத்த ஜேபி மோர்கன் வழக்கு…. ஷாக் பின்னணி…!

அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனமான ஜேபி மோர்கன் (JPMorgan) வங்கியின் லிவரேஜ்டு ஃபைனான்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய லோர்னா…

18 minutes ago

மேடையிலிருந்து குதித்த மணப்பெண்.. மாலை மாற்றும் நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. கௌரவம் பார்க்கப்போய் நடுத்தெருவுக்கு வந்த தந்தை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில், திருமண மேடையிலேயே மணப்பெண் செய்த அதிரடி காரியம் ஒட்டுமொத்த ஊரையும் அதிர வைத்துள்ளது.…

20 minutes ago

இனி ஹார்முஸ் இல்லவே இல்லை…உலகத்தையே அதிரவைத்த ட்ரம்ப்பின் ஒற்றை ‘மேப்’ பதிவு… உலக அரசியலில் ட்ரம்ப் பிராண்ட்…!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றமான சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை "ட்ரம்ப் ஜலசந்தி"…

23 minutes ago