பாட்னாவில் உள்ள பாராஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனது சிறுநீரகம் திருடப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாட்னாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், காயம் காரணமாகச் சிகிச்சை பெறுவதற்காக அங்குள்ள புகழ்பெற்ற பாராஸ் (Paras Hospital) மருத்துவமனைக்குச் சென்றிருந்தான். ஆனால், சிகிச்சையில் இருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. சிறுவனின் உடலைப் பார்த்த உறவினர்கள், அவனது உடலில் சிறுநீரகம் அகற்றப்பட்டதற்கான தழும்புகள் மற்றும் அறுவை சிகிச்சை அடையாளங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
“எனது பிள்ளையின் சிறுநீரகத்தை எடுத்துவிட்டார்கள்” என்று அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுததோடு, நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவன் காயம் காரணமாகவே அனுமதிக்கப்பட்ட நிலையில், உடலில் சிறுநீரகம் எடுப்பதற்கான தழும்புகள் எப்படி வந்தன என்பது குறித்துப் பலத்த சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
உறவினர்களின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுநீரகம் திருடப்பட்டதா அல்லது சிகிச்சையின் போது வேறு ஏதேனும் தவறுகள் நடந்ததா என்பது குறித்து மருத்துவக் குழுவினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…