“என் பிள்ளையோட கிட்னியை எடுத்துட்டாங்க” சிகிச்சைக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்… கதறி அழும் தாய்… நெஞ்சை உறைய வைக்கும் காட்சி..!!

Spread the love

பாட்னாவில் உள்ள பாராஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனது சிறுநீரகம் திருடப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாட்னாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், காயம் காரணமாகச் சிகிச்சை பெறுவதற்காக அங்குள்ள புகழ்பெற்ற பாராஸ் (Paras Hospital) மருத்துவமனைக்குச் சென்றிருந்தான். ஆனால், சிகிச்சையில் இருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. சிறுவனின் உடலைப் பார்த்த உறவினர்கள், அவனது உடலில் சிறுநீரகம் அகற்றப்பட்டதற்கான தழும்புகள் மற்றும் அறுவை சிகிச்சை அடையாளங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

“எனது பிள்ளையின் சிறுநீரகத்தை எடுத்துவிட்டார்கள்” என்று அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுததோடு, நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவன் காயம் காரணமாகவே அனுமதிக்கப்பட்ட நிலையில், உடலில் சிறுநீரகம் எடுப்பதற்கான தழும்புகள் எப்படி வந்தன என்பது குறித்துப் பலத்த சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

உறவினர்களின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுநீரகம் திருடப்பட்டதா அல்லது சிகிச்சையின் போது வேறு ஏதேனும் தவறுகள் நடந்ததா என்பது குறித்து மருத்துவக் குழுவினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

8 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

8 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

8 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

8 மணத்தியாலங்கள் ago