உத்தரப் பிரதேச மாநிலத்தில் மோமோஸ் என்ற சிற்றுண்டிக்காக 7-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன், தனது வீட்டில் இருந்த சுமார் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கடைக்காரர்களிடம் ஒப்படைத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தியோரியா மாவட்டத்தில் உள்ள தும்ரி சௌராஹா பகுதியில் மோமோஸ் கடை நடத்தி வந்த மூன்று இளைஞர்கள், இந்தச் சிறுவனைத் தந்திரமாக ஏமாற்றி இந்தச் செயலில் ஈடுபட வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த மூன்று கடைக்காரர்களும் அந்தச் சிறுவனுடன் முதலில் நட்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். பின்னர், அவனுக்கு மிகவும் பிடித்தமான மோமோஸை இலவசமாகத் தருவதாக ஆசை காட்டி, அதற்கு ஈடாக அவனது வீட்டில் உள்ள நகைகளை எடுத்து வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். மோமோஸ் மீது இருந்த அதிகப்படியான விருப்பத்தால், அந்தச் சிறுவனும் தனது குடும்பத்தாருக்குத் தெரியாமல் அவ்வப்போது நகைகளை எடுத்துச் சென்று அவர்களிடம் கொடுத்து வந்துள்ளான்.
சிறுவனின் சகோதரி தனது நகைகளைத் தேடியபோதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனதை அறிந்த குடும்பத்தினர் சிறுவனிடம் விசாரித்தபோது, அவன் மோமோஸிற்காக கடைக்காரர்களிடம் நகைகளைக் கொடுத்த உண்மையை ஒப்புக் கொண்டான். ஒரு கோயில் பூசாரியாக இருக்கும் சிறுவனின் தந்தை விம்லேஷ் மிஸ்ரா, உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், ராம்பூர் கர்கானா காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மூன்று கடைக்காரர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிபோன நகைகளின் மதிப்பு சுமார் 85 லட்சம் ரூபாய் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளிடம் ஆசை காட்டி திருடத் தூண்டும் இத்தகைய நபர்களைக் குறித்துப் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அஜீத்குமார் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக துபாயில் இருந்து வருகிறார். அங்கு தொடர்ந்து நடந்து வரும் கார் ரேஸில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அதிமுகவை விமர்சித்துப் பேசியதற்கு அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
இயக்குனர் தமிழ் இயக்கத்தில் வெளியான படம் டாணாக்காரன். போலீஸ் பயிற்சியில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் உருவாகி…
நடிகர் ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை அடுத்த ஓரிரு…
ராஜஸ்தான் மாநிலம் பிடாசரில் கடந்த டிசம்பர் மாதம் காணாமல் போன 10-ஆம் வகுப்பு மாணவி, ஒரு கல் குவாரியில் சடலமாகக்…