தமிழகத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என்று தொடர்ச்சியாக உறுதியளித்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக ஆட்சியில், பெருங்களத்தூரில் சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிலான இரண்டு டெண்டர்களில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதமே திறக்கப்பட்டுவிட்ட சிலைகளுக்கு, ஆகஸ்ட் மாதத்தில் ரகசியமாக டெண்டர் கோரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பது பெரும் சர்ச்சை புயலைக் கிளப்பியுள்ளது.
இதேபோல மேலும் இரு சிலைகளை அமைச்சர் சரத் திறந்து வைத்துள்ள நிலையில், சட்ட விதிமுறைகளையும் வெளிப்படைத்தன்மையையும் காற்றில் பறக்கவிட்டு எடுக்கப்பட்ட இந்த முடிவுகள் அரசின் நிர்வாகக் குளறுபடியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “ஊழலை வேரறுப்போம்” என்று மேடைகளில் முழங்கிய முதலமைச்சர் விஜய், தன் சொந்த ஆட்சியிலேயே அம்பலமாகியுள்ள இந்த முறைகேடு விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு நேர்மையான நடவடிக்கை எடுப்பாரா அல்லது மௌனம் சாதிப்பாரா என்பதே தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.
சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…
திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன் (38) கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி…