Categories: சினிமா

எம்ஜிஆரை பற்றி குறை கூறி எழுதிய பத்திரிகையாளர்… விஷயத்தை அறிந்த புரட்சி தலைவர் செய்த காரியம்…

Spread the love

எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி பாதையை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் எம்ஜிஆர்.

குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க வந்த எம்ஜிஆர் பின்னர் நடிகராக உயர்ந்தார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தன் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். எம்ஜிஆர் படங்கள் என்றாலே திராவிட சிந்தனைகள் க்ஷன் காட்சிகள் சமூக நீதி கருத்துக்கள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.

தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர் வாரி வழங்கும் வள்ளல் தன்னை சார்ந்தவர்களும் தன்னை எதிர்ப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்காக உதவி செய்தவர். அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் கரீம் என்ற பத்திரிகையாளர் எம்ஜிஆரை பற்றி மிகவும் குறை கூறி பொய் மூட்டைகளாக பத்திரிகையில் எழுதி வந்தார். ஒருமுறை கரீம் பணக்கஷ்டத்தில் இருந்தார். மகளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை மற்றவர்களின் அறிவுரையால் எம்ஜிஆர் வீடு தேடி இராமாபுரம் சென்றார். ஆனால் வாசலில் காவலாளி தடுக்கவே எம்ஜிஆர் அவரை உள்ளே வரச்சொன்னார். எம்ஜிஆரின் முன்னால் பேச முடியாமல் குற்ற உணர்ச்சியில் நின்ற கரீமிடம் எம்ஜிஆர் நான் பழசை மறந்துட்டேன் உங்களுக்கு உதவி செய்றேன் என்று பணத்தை கொடுத்து அனுப்பினார். உதவியாளர்கள் அவர் உங்களை பற்றி குறை கூறினாரே என்று கேட்டதற்கு என்ன செய்வது வீடு தேடி என் வாசல் தேடி வந்துவிட்டார். அவருக்கு உதவி செய்ய தானே வேண்டும் என்று கூறினார். அத்தகைய பெரிய மனசுக்கு சொந்தக்காரர் எம்ஜிஆர்.

admin

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

8 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

9 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

9 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

9 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

9 மணத்தியாலங்கள் ago