பிரபல நடிகை மீனாட்சி சௌத்ரி தனது வருங்கால கணவர் குறித்து வெளியிட்டிருக்கும் வினோதமான நிபந்தனைகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தன்னைத் திருமணம் செய்து கொள்ளப்போகும் நபருக்கு சமையல் கலை தெரிந்திருப்பது மிக அவசியம் என்று கூறியுள்ளார். சமையல் மட்டுமல்லாது, வீட்டு வேலைகளில் கைதேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதையும் அவர் தனது நிபந்தனையாக முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து தனது நீண்ட விருப்பப் பட்டியலை அடுக்கிய அவர், தனக்கு வரப்போகும் கணவருக்குக் குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலமாவது சொந்தமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சொத்து விவரங்கள் ஒருபுறம் இருக்க, அடிப்படை வீட்டு வேலைகளான துணி துவைப்பது மற்றும் அயர்ன் செய்வது போன்ற பணிகளையும் அவரே செய்யக்கூடியவராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சின்ன சின்ன வேலைகளுக்குக் கூட மற்றவர்களை எதிர்பார்க்காமல், தற்சார்புடன் செயல்படும் குணம் கொண்டவரையே தான் விரும்புவதாக மீனாட்சி சௌத்ரி அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். நடிகையின் இந்த ‘ஹை டிமாண்ட்’ லிஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள், “இது கணவருக்கான தகுதியா அல்லது ஆல்-இன்-ஆல் வேலைக்காரருக்கான தகுதியா?” என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…