சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ராயல்டி பற்றிய பஞ்சாயத்து பரவலாக விவாதமாகியுள்ளது. இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அது சம்மந்தமாக பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. குறிப்பாக இளையராஜா பணத்தாசையால் இப்படி நடந்து கொள்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராயல்டி சம்மந்தமாக குழப்பமான கருத்துகள் நிலவுவதால் இதுபற்றிய தெளிவான புரிதல் பலருக்கும் இல்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் ஒரே ஒரு பாடலைப் பயன்படுத்தி ஹாலிவுட்டில் ஒரு கோடி ரூபாயை ராயல்டியாக இயக்குனர் மணிரத்னம் சம்பாதித்துள்ளார் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது. மணிரத்னம் தயாரித்து இயக்கிய தில்சே படத்தில் சையா சையா என்ற பாடல் இடம்பெற்றது.
ஹாலிவுட் இயக்குனர் ஸ்பைக் லீ இயக்கிய இன்சைட் மேன் என்ற படத்தின் ஆரம்பத்தில் இந்த பாடலை பயன்படுத்த அனுமதிக் கேட்டுள்ளனர். அப்போது இந்த பாடல் வேண்டுமென்றால் ஒரு கோடி ரூபாய் ராயல்டியாக கொடுங்கள். அப்போதுதான் தருவோம் எனக் கறாராகக் கூறியுள்ளார் மணிரத்னம். அவர்களும் அந்த பாடலுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துவிட்டு அதைப் பயன்படுத்திக் கொண்டார்களாம்.
மணிரத்னம் பிடிவாதமாக ஒரு கோடி ரூபாய் கேட்க ஒரு பின்னணி காரணம் இருக்கிறது. அலைபாயுதே படத்தின் போது ஆரம்பக் காட்சியில் ‘என்றென்றும் புன்னகை’ பாடலுக்கு பதிலாக Backstreet Boys -ன் ஒரு பாடலை ஒலிக்க விடலாம் என்பதுதான் படக்குழுவின் திட்டமாக இருந்ததாம். அப்போது சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் அதற்கான உரிமையைக் கேட்ட போது அவர்கள் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் எனக் கேட்டார்களாம்.
அவ்வளவு பெரிய தொகை தர முடியாது என்பதால் ரஹ்மானை வைத்து புதிதாக என்றென்றும் புன்னகை பாடலை உருவாக்கி பயன்படுத்தினார்களாம். சம்மந்தப்பட்ட அதே நிறுவனம்தான் சையா சையா பாடலைக் கேட்டபோது மணிரத்னம் அதே ஒரு கோடியை கேட்டு பெற்றாராம்.
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986…
தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…
தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று செல்லமாக…
கயல் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான ஆனந்தி வைட் ஷர்ட் மற்றும் பிளாக் பேண்டில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி…
தமிழ் சினிமாவில் என்னதான் திறமை இருந்தாலும், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ஒரு நடிகர் என்றால் அது சிம்பு தான்.…