சமீபகாலமாகவே திமுகவின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளிவரும் சிலரின் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்திலும் கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுடன் ஆன கூட்டணி தொடரும் என காங்கிரஸிலிருந்து ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருவதும் மற்றொரு தரப்பினர் கருத்துக்கள் திமுகவை சீண்டி பார்க்கும் விதமாகவே அமைவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றன. காங்கிரஸின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி அண்மையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயை சந்தித்ததாக கூறப்பட்ட நிலையில் தமிழக அரசியலில் அது விவாத பொருளானது.
விஜயுடன் சந்திப்பை நேற்று அவர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். இப்படியான நிலையில் INDIA கூட்டணியில் காங்கிரஸ் ஒரு பகுதி, திமுக பங்காளி என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். அத்துடன் கூட்டணி கட்சிகள் மாற்றம் குறித்த விவாதம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்து திமுக உடனே கூட்டணி என்ற நிலையை காங்கிரஸ் உறுதிப்படுத்தி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…