#image_title
பிரபல மலையாள நடிகையான மமிதா பைஜு நடிப்பில் கடைசியாக பிரேமலு திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் பிரபல நடிகர் முரளியின் மகனான அதர்வாவை வைத்து லைக்கா நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இயக்குகிறார்.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர். மேலும் புறநானூறு படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தான் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக மமிதா பைஜுவை கமிட் செய்துள்ளனர். படப்பிடிப்பை USA வில் நடத்த திட்டமிட்டு மமிதா பைஜுவுக்கு விசா உள்ளிட்ட ஏற்பாடுகளை பட குழுவினர் செய்து வந்தனர்.
இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்ட நிலையில் மமிதா பைஜுவிடம் இருந்து எந்த ரெஸ்பான்ஸ் வரவில்லையாம். பட குழுவினர் எப்படியோ மமிதா பைஜுவின் சகோதரரை தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்து விட்டதாக கூறியுள்ளார். காரணம் என்னவென்றால் தளபதி விஜய் நடிக்கும் 69-ஆவது படத்தில் மமிதா பைஜு நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.
தளபதியின் 69-ஆவது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். தற்போது பிரீ ப்ரோடுக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். மமிதா பைஜு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. விஜய் படத்தில் நடித்தால் தனது மார்க்கெட் உயரும் என்பதால் மமிதா பைஜு அதர்வா படத்தில் இருந்து விலகியதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…