மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவர் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். இதுவரை 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகர் மோகன் லால் மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமே ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். தமிழில் இவர் உன்னை போல் ஒருவன், ஜில்லா, காப்பான் என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் இவர் தற்பொழுது ராம் முதல் பாகம், மலைக்கோட்டை வாலிபன், Barroz: Guardian of D’Gama’s Treasure பல படங்களை கைவசம் வைத்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2012-ல் மோகன்லாலுக்கு சொந்தமான வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இரண்டு யானை தந்தங்கள் பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் அவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விலங்குகள் பாதுகாப்பு சட்டத்துக்கு விரோதமாக யானை தந்தங்களை பதுக்கியதாக மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோர்ட்டில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது . இந்த நிலையில் யானை தந்தம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மோகன்லால் வருகிற நவம்பர் 3-ந்தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று பெரும்பாவூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். வழக்கை திரும்ப பெறக்கோரி மாநில அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தார். தற்பொழுது இந்த வழக்கு விசாரணை இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கடல் என்பது இன்னும் முழுமையாகக் கண்டறியப்படாத பல மர்மங்களைக் கொண்டது. விண்வெளியைப் பற்றி அதிகம் அறிந்த மனிதனால், கடலின் 5…
யுகாண்டாவில் உள்ள நைல் நதியின் மிக ஆபத்தான மற்றும் அதிவேகமாகப் பாயும் நீரோட்டத்தில், நபர் ஒருவர் எவ்வித அச்சமுமின்றி மிதந்து…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், பெண் ஒருவர் வாடிய வெள்ளரிக்காய்களைப் பசுமையாகக் காட்டுவதற்காக, அவற்றை செயற்கை…
ஈரோடு மாவட்டம் பர்கூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில்…
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல், ஒரு விறுவிறுப்பான அரசியல் த்ரில்லர் திரைப்படத்தைப் போலத் திருப்பங்களுக்குப்…
ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி (RCB) அணிக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா…