விஜய்க்கு காத்திருக்கும் அக்னிப்பரீட்சை… உள்ளே செல்லப்போகும் 232 எம்.எல்.ஏ-க்கள்.. மூடப்படப்போகும் கதவுகள்.. தமிழக சட்டமன்றத்தில் இன்று நடக்கப்போகும் அதிரடி மாற்றம்…!

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்ற விஜய் அவர்களுக்கு, மே 13-ஆம் தேதிக்குள் (இன்று) பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலைமையில் சட்டசபைக் கூட்டம் கூடுகிறது. இந்த முக்கியமான நிகழ்வில், அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் முன்மொழிய உள்ளார்.

வாக்கெடுப்பு நடைமுறையின்படி, அவையின் அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டு, உறுப்பினர்கள் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். தற்போதுள்ள 232 உறுப்பினர்களில், பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தவெக-விற்கு சொந்தமாக 106 உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சிகளின் 13 உறுப்பினர்களும் என மொத்தம் 119 பேரின் ஆதரவு உள்ளதால், விஜய் அவர்கள் எவ்வித சிக்கலுமின்றி பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வாக்கெடுப்பில், அதிமுக-வின் சி.வி. சண்முகம் தலைமையிலான ஒரு குழுவினர் விஜய்க்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தரப்பு தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளதால் அவையில் காரசாரமான விவாதங்கள் எழ வாய்ப்புள்ளது. இதையொட்டி, சென்னை பனையூர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்ற விதிகள் மற்றும் வாக்கெடுப்பு முக்கியத்துவம் குறித்து எம்.எல்.ஏ-க்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. உறுப்பினர்களுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டு, பெயர்கள் ஒட்டப்பட்டு அவை தயார் நிலையில் உள்ளது. அனைத்துக் கணக்குகளும் சாதகமாக இருப்பதால், இன்றைய வாக்கெடுப்பின் முடிவில் முதல்வர் விஜய் தனது தலைமையிலான அரசின் நிலைத்தன்மையை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்வார் என்றே தெரிகிறது.

Nanthini

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

1 மணத்தியாலம் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

1 மணத்தியாலம் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

1 மணத்தியாலம் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

2 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

2 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

2 மணத்தியாலங்கள் ago