தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படம் வசூலில் சக்க போடு போட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
உலகம் முழுவதும் ரிலீசான முதல் நாளே 148.5 கோடி வசூலித்து சாதனையும் படைத்தது. 250 முதல் 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 12 நாள் முடிவில் ரூ. 500 கோடிக்கு மேல் வசூவித்துள்ளது. வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகமாகும் என்றும் கூறி வருகின்றனர். எனவே நேற்று லியோ வெற்றி விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 6000 பேர் கலந்துகொள்ள நிகழ்ச்சி நடந்தது.
இந்த வெற்றி விழாவில் விஜய், திரிஷா, மிஸ்கின், அர்ஜுன், கௌதமேனன், மன்சூர் அலிகான், பிக் பாஸ் ஜனனி, மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டின் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமினாஸ், கலை இயக்குனர் சதீஷ்குமார் நடிகர் விஜய்யின் தாய் சோபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இயக்குனரும் லியோவின் வசனகர்த்தாவில் ஒருவருமான ரத்னகுமார் விழாவில் பேசியது தற்பொழுது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
அதாவது அவர் இந்த விழாவில் ‘ எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசிச்சா கீழ தானே வரணும்’ என கூறியிருந்தார். தற்பொழுது அவர் இதில் மறைமுகமாக நடிகர் ரஜினியை கூறுவதாக கூறி வைரலாகி வருகின்றனர் நெட்டிசன்கள். அதாவது, ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி ‘காகம் ஒரு இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் பறந்து கொண்டே இருக்கும். மற்ற பறவை விலங்குகளை தொந்தரவு செய்யும். ஆனால் பருந்து அமைதியாக இருந்து காகம் தொந்தரவு செய்தால் கூட வேகமாக உயிர பறந்து விடும். அது போன்று காகம் உயரமாக பறக்க ஆசைப்பட்டால் பறக்க முடியாது. கீழே வந்து விடும்.’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், எரியுற தீயில் எண்ணையை ஊற்றுவது போல ரஜினிகாந்தை குறிப்பிட்டு தான் ரத்னகுமார் பேசியுள்ளார் என்பதை குறிப்பிடும் வகையில் ப்ளூ சட்டை மாறன் ‘கைய குடுங்க சகல’ என மீம் போட்டு கலாய்த்துள்ளார். மேலும், தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜிடம் ‘அந்த ரத்னாவை படம் முடியுற வரை என் கண்ணில் படாமல் பார்த்துக்கோ’ன்னு சொல்லியதாகவும் ட்வீட் போட்டுள்ளார். அவரின் இந்த மீம்கள் தற்பொழுது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…