நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ், அண்மைக்காலமாக திமுகவுக்கு ஆதரவாகவும், நடிகர் விஜய்க்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் பேசிய கருணாஸ், விஜய்யை மறைமுகமாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் பேசுகையில், “ஒரு மக்களுக்கான தலைவராக இருக்க வேண்டும் என்றால், அவரது வீட்டு வாசலில் கதவுகள் எப்போதும் திறந்திருக்க வேண்டும். ஆனால், உங்களைப் பார்க்க நான் தனி விமானத்தில் வர வேண்டும் என்ற நிலை இருக்கிறது. அப்படி இருக்கையில், நீங்கள் எப்படி மக்களுக்கான தலைவராக இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், விஜய்க்குத் தொடக்கத்தில் சம்பளத்தை உயர்த்திக் கொடுத்ததே ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் என்றும் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் தன்னைச் சின்ன சின்ன பசங்களை வைத்து கெட்ட வார்த்தையில் பேச வைப்பதாகக் கருணாஸ் குற்றம் சாட்டினார். அப்படிப் பேசினால் தான் டிஸ்டர்ப் ஆகிவிடுவேன் என்று அவர்கள் நினைப்பதாகக் கூறிய அவர், “நாங்கள் கெட்ட வார்த்தைக்காகவே தனி டிக்ஷனரி போட்டவர்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும், தன்னைச் சிலர் ‘கூவத்தூர் மாமா’ என்று விமர்சிப்பதாகவும், தான் தவறு செய்திருந்தால் ஆமாம் என்று கூடச் சொல்லிவிட்டுப் போவேன் என்றும், ஆனால் செய்யாததற்குப் பழியைச் சுமத்தினால், சொல்பவனை மாமா ஆக்கிவிடுவேன் என்றும் கருணாஸ் மிரட்டும் தோணியில் பேசியது இணையத்தில் பரவி வருகிறது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…