தமிழகச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு எதிர்பாராத ஒரு பெரும் பின்னடைவைத் தந்துள்ளன. கடந்த 59 ஆண்டுகாலமாக தமிழக அரசியலில் நீடித்து வந்த திராவிடக் கட்சிகளின் தனித்துவமான ஆதிக்கத்தை உடைத்து, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய ஆட்சியை அமைத்துள்ளது. இந்தத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் பின்னடைவைச் சந்தித்தது ஒட்டுமொத்த திமுக தொண்டர்களிடையேயும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இக்கட்டான காலகட்டத்தில், தொய்வடைந்துள்ள கட்சியை அடிமட்டத்திலிருந்து மீண்டும் பலப்படுத்த திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தீவிரமாகப் பொது அரசியலில் களமிறங்க முடிவு செய்துள்ளார். குறிப்பாக, இந்தத் தேர்தலில் தவெக-வை நோக்கிச் சென்ற பெண்களின் வாக்குகள் திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. எனவே, கனிமொழியின் ஆளுமை மூலமாக இழந்த பெண் வாக்காளர்களை மீண்டும் திமுக பக்கம் கொண்டு வர அக்கட்சி தற்போது முக்கிய வியூகம் வகுத்துள்ளது.
கனிமொழி டெல்லி அரசியலில் இருந்து தனது கவனத்தை முழுமையாகத் தமிழகத்தின் பக்கம் திருப்பி, மாநில அரசியலில் தீவிரப் பங்காற்றத் திட்டமிட்டுள்ளார். இதற்கு முன்பு கனிமொழி மாநில அரசியலில் கவனம் செலுத்த முனைந்தபோது ஸ்டாலினும் உதயநிதியும் தயக்கம் காட்டியதாகக் கூறப்பட்டாலும், தற்போதைய தோல்விச் சூழலில் உதயநிதி ஸ்டாலின் இதற்கு முழு ஒப்புதல் அளித்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு முன்னதாக கனிமொழியின் இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோர் நேரில் சந்தித்து நடத்திய ஆலோசனையில்தான் இந்த முடிவு இறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆரம்பகால ஆதரவு (‘ஹனிமூன் பீரியட்’) முடிவடைவதற்குள், திமுக தனது உட்கட்சிப் பூசல்களைத் தீர்க்க முடிவு செய்துள்ளது. இதற்காக மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள தேர்தல் தோல்விப் பரிசீலனைக் குழுக்களுடன் இணைந்து, கனிமொழியும் நேரடியாகப் பல மாவட்டங்களுக்குச் சென்று ரகசியத் தரவுகளைச் சேகரிக்கவுள்ளார். விரைவில் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகிய மூவரும் இணைந்து தமிழகம் தழுவிய பிரம்மாண்ட அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இது தவெக அரசுக்கு மிகப்பெரிய அரசியல் குடைச்சலைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா (27). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியைச்…
திமுக இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் காங்கிரசுக்கு எதிராகப் பேசியதைத் தொடர்ந்து, விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திமுக…
விருதுநகரில் சினிமா பாணியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பலாத்கார வழக்கு, திருட்டு…
நடிகர் சூர்யாவின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கருப்பு' திரைப்படத்திற்குத் தியேட்டர்களில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. த்ரிஷா,…
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்…
கேரள மாநில அரசின் சித்திரை விஷூ பம்பர் லாட்டரி குலுக்கலில், கொல்லம் மாவட்டம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த ஏழை பெயிண்டிங்…