இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு இன்று காலமானார். அவருக்கு வயது 101. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் நடிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர். பொது நலத்திற்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு ஐயா நம்மிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டார். ஏழை எளிய மக்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரிகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர். தகைசால் தமிழரே… செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் என்னில் தொடரட்டும் என்று அந்த பதிவில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…