சூர்யா சொன்ன ஒரு மாசத்திலேயே கல்யாணம்…! ஒரு சண்டை கூட போட்டதில்லை…. கணவர் குறித்து மனம் திறந்த ஜோதிகா…!!!

By admin

Updated on:

தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஜோதிகா. இவர் தனது 45 வது பிறந்த நாளை கடந்த புதன்கிழமை கொண்டாடியிருந்தார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் கொடுத்த பழைய இண்டர்வியூ வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அவர் தனது கணவர் சூர்யா பற்றி பல நெகழ்ச்சியான சம்பவங்களை பகிர்ந்திருப்பார்.

   

தனக்கும் தனது கணவர் சூர்யாவிற்கும் இடையே காதல் எப்படி மலர்ந்தது என்பதையும் அவர் பகிர்ந்திருக்கிறார். சூர்யாவை திருமணம் செய்து கொண்டதற்கான காரணத்தை அவர் தெரிவித்திருந்தார். எனக்கு சூர்யா தான் வேண்டும் என்று முடிவு எடுத்ததற்கு அவர் தனக்கு அளித்த மரியாதை தான் காரணம் என்று கூறினார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் தான் நாங்கள் முதன் முதலில் சந்தித்தோம்.

அப்போதே என்னிடம் அவர் சாதாரணமாக பேசுவார் அதைத்தொடர்ந்து 7 திரைப்படங்களில் ஒன்றாக நடித்தோம். ஹீரோயின் சம்பந்தப்பட்ட காதல் காட்சியை இயக்குனர் எப்படி கூறுகிறாரோ? அந்த அளவுக்கு மட்டும்தான் நடிப்பார். அதைத் தாண்டி அவர் எந்த ஒரு அட்வான்டேஜும் எடுத்துக் கொள்ள மாட்டார். சூர்யா மற்ற பெண்களையும் மதிக்கின்றார். அவரது மரியாதை தான் என்னை ஈர்த்தது என்று கூறினார்.

மேலும் தனது சினிமா வாழ்க்கையில் ஏகப்பட்ட பாதிப்பை நான் சந்தித்திருக்கின்றேன். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்புகளில் தனது வாழ்க்கையை கழித்தேன். இரவு காட்சிகள் என தொடர்ந்து தூங்கக் கூட நேரமில்லாமல் பலவித சோர்வை சந்தித்தேன். ஆனால் தனக்கு தேவையான பணத்தை நான் சம்பாதித்துக் கொண்டேன். எங்களது காதலை சூர்யா அவரது பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கிய ஒரு மாதத்திற்குள் நான் அவரை திருமணம் செய்து கொண்டேன்.

ஆனால் அதற்கு முன்பு நான் கமிட் செய்திருந்தை அனைத்துப் படங்களையும் வேண்டாம் என்று மறுத்து அவர்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டேன். நான் மற்றொன்றையும் சொல்ல வேண்டும், அவர் அவர் ஒரு நல்ல கணவராக மட்டுமில்லாமல் சின்சியர் அப்பாவாகவும் இருக்கின்றார். சூர்யா நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து பலரும் பொறாமைப்படுவார்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது வரை அவர் ஒரு முக்கியமான நாட்களையும் மறந்ததே கிடையாது. அனைத்தையும் ஞாபகம் வைத்து வாழ்த்து தெரிவிப்பார். அது எனக்கே சில சமயங்களில் ஆச்சரியமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.