2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் தலைவர் G.B. பச்சையப்பன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.
வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து செயல்படப்போவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்திய ‘சிவப்பு-மஞ்சள்-சிவப்பு’ நிறத்திலான கொடிக்கு எதிராக, அது தமது சமூகத்தின் அடையாளத்தை ஒத்திருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர் பச்சையப்பன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சேர்க்கை, வடதமிழகத்தில் அதிமுகவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குர்ஹானி பகுதியில், காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைப்பதைத் தடுக்கும் உள்நோக்கத்துடன் ஆளுநர் அனுமதி மறுத்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்தாலும், திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.…
மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்தை நாளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாகத்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் அவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். இதற்காக அவர்…